02 மார்ச் 2010


போர்ச்சின்னமா? இதுயார்கன்னமா?

செந்தமிழர் வடிந்த கண்ணீர்க் குளத்தினதின் நடுவே
செந்தணலாய் வெந்தவரின் சிதைகளின் மேலே
சிதறிப்போன ரத்தச்சதை மலைகுவியல்களின் மேலே-திறப்புவிழா
செய்தசிலை கூறும்… அவர்கள்; போரில்செய்த வதைதனையே.

சொந்தமண்ணில் வாழ்வுகேட்ட செந்தமிழர்களின் வாழ்வை
சேடித்துப் பயங்கரவாதியென முத்திரையும் குத்தி -பலநாடுதனை
கூட்டிவந்து கொன்றொழித்தும் கூட்டியள்ளிச்சென்று முட்கம்பி
கூட்டில் சிறையில் வதைப்பது உலகில் எந்தநாட்டு போர்முறையோ?
ஆட்டம்போட்டு வெற்றிகாணும் ஆரவாரம்தான் இதற்கெதற்கு?
வோட்டுச்சீட்டுகேட்டு தன்னைகூட்டுகின்ற வழியா இந்தக்கணக்கு?

துப்பாக்கி தூக்கவைத்த துர்ப்பாக்கிகள் தாமென்று
தூக்கிப்பிடிக்கின்றார் தம்குற்றத்தை துணிந்து ஏற்கின்றார்
நப்பாசைதான் நம்மண்ணில் நடுகல்லாய் இருப்பதற்கு.
அப்பவேன் எம்மறவர் அமைதியை தூக்கத்தைக் கலைத்தனரோ?
உப்கைத்தின்ற நன்றியும் இல்லாதோர்; சிலர் உடனிருப்பதாலோ?

செந்தமிழர் குருதி வழிந்தோடியதைக் கூறிடவோ-மகிந்தன்
செங்கம்பள விரிப்பில்சென்று திறந்துவைக்கின்றாரோ?
பங்கப்பட்டு பரதவித்த எம்பைந்தமிழர் மனங்கள் படும்பாட்டை
பங்காளிப்பாரதமே !இந்தப்பாவமெல்லாம் சுமப்பாய் நீதானே.